தனுஷ் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜினிமுருகன் படநாயகி கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு இமான் இசையமைக்க, வி.மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இந்நிலையில் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றால் தான் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பார்கள்.
ஆனால் சமீபத்தில் வெளியான பாகுபலி படம் தயாராகும் போதே அதனின் இரண்டு பாகங்களையும் ராஜமௌலி இயக்கியிருந்தார். இன்னும் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளே மீதம் உள்ளது. எனவே பாகுபலியைப் போல் வடசென்னை படத்தையும் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
தனுஷிடம் கதை சொல்லும்போதே இந்த யோசனையை வெற்றிமாறன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment