இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கொமடியான கலகல வீடியோவை பதிவிட்டுள்ளார்.
பொதுவாக கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் என அனைத்து போட்டிகளின் போதும் பெட்டிங்கில் ஈடுபடுபவர்கள் மைதானங்களில் நிர்வாணமாக அங்கும் இங்கும் ஓடுவர்.
இவர்களை மைதான பாதுகாவலர்கள் விரட்டிப் பிடிப்பர். இந்த நிகழ்வை மையமாக வைத்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவை தான் ஜெயவர்த்தனே தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் நிர்வாணமாக சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளனர்.
அப்போது உடை அணிந்த ஒருவர் நிர்வாணமாக கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் அங்கும் இங்கும் ஓடுகிறார்.
பின்னர் மைதான பாதுகாவலராக ஒருவர் அவரை பிடிக்க ஓடுகிறார். அவரும் நிர்வாணமாகவே இருக்கிறார்.
இந்த கலகல வீடியோவை “ஹா..ஹா.. ஹேப்பி சண்டே” எனக் குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் ஜெயவர்த்தனே.

0 comments:

Post a Comment

 
Top